கணவரை அடித்துக் கொலை செய்த மனைவி கைது!

Mullinews WhatsApp Group on WhatsApp
கணவரை அடித்துக் கொலை செய்த மனைவி கைது!

இப்பலோகம, விஜிதபுர பகுதியில் மனைவி ஒருவர் தனது கணவரைக் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார் குறித்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது.

இந்தநிலையில், மனைவி தமது கணவரை கட்டையால் தாக்கியுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் கணவர் உயிரிழந்ததாக இப்பலோகம காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இதன்போது உயிரிழந்தவர் 52 வயதானவர் என்பதுடன், தாக்குதலை நடத்திய அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இப்பலோகம காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW