பிக்கு ஒருவரினால் தாக்கப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் உயிரிழப்பு!

Mullinews WhatsApp Group on WhatsApp
பிக்கு ஒருவரினால் தாக்கப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் உயிரிழப்பு!

தெனியாய – பல்லேகம பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த காவல்துறை கான்ஸ்டபிள் உயிரிழந்தார்.

தெனியாய காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த 37 வயதான குறித்த காவல்துறை கான்ஸ்டபிள் கடந்த 16ஆம் திகதி தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த நிலையில் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW